இந்திய சிற்பக் கலை மரபில் சிற்ப வடிவம் இயற்கையாக அமைக்கப்படுவதில்லை. அவை ஆடற்கலை பாணியில் உணர்ச்சிகளை, கருத்துகளை மொழியின்றி வெளிப்படுத்தும் வகையில் வரையறுக்கப்பட்டுள்ள இலக்கணங்களுக்கு ஏற்ப அமைகின்றன. இது இந்திய சிற்பக் கலை மரபின் சிறப்பியல்பு. இவ்விதத்தில் இந்திய சிற்பக்கலை மரபு மற்ற நாடுகளின் சிற்பக்கலை மரபுகளில் இருந்து வேறுபடுகிறது. ஆடற்கலை இலக்கணங்களை நேரடியாகக் கொள்ளமல் படிமத்தின் தன்மை, கருத்துக்கேற்ப சிற்பக்கலை தன் இலக்கணங்களை வகுத்துக்கொண்டுள்ளது. அவற்றுள் ஆசனங்கள், உடல் பங்கங்கள், கை முத்திரைகள் முக்கியமானவை. பங்கம் படிமங்களின் உடல் ஒடிவு, வளைவுகளுக்கு பங்கம் என்று பெயர். பங்க அமைதி நின்ற நிலை படிமங்களுக்கே உரித்தானது. கல்லில் வடிப்பதைவிட உலோகங்களில் பங்கங்களை எளிதாகக் காட்ட முடியும். வகைப்பாடு பங்கம் மூவகைப்படும் ஆபங்கம் - குறைந்த ஒடிவு, வளைவு சமபங்கம் - இடைப்பட்ட ஒடிவு, வளைவு அதிபங்கம் - அதிகமான ஒடிவு, வளைவு மூன்று பங்க அமைதிகளுமே மூன்று உடல் ஒடிவுகள் கொண்டிருப்பதால் அவை ' திரிபங்கம்' என்றும் அழைக்கப்படும். பங்க அமைதிகளின் கருத்து நிலை சமபாத ஸ்தானகம் தலையும் உடல...